Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்தியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? அவரே உறுதிப்படுத்திய தகவல்!

கார்த்தியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? அவரே உறுதிப்படுத்திய தகவல்!
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:38 IST)
கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளுக்காக ராஜு முருகன் இப்போது கேரளாவி முகாமிட்டுள்ளாராம். இந்த திரைப்படம் கார்த்தியின் 25 ஆவது படமாக அமைவதால் கூடுதல் அக்கறையோடு படக்குழுவினர் உழைக்கிறார்களாம். இந்த படத்துக்கு ஜப்பான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் விருமன் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜு முருகன் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறிய லோகேஷ்…. இதுதான் காரணமா?