Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் முறையாக இரு மருமகன்களுடன் ரஜினி: வைரலாகும் போட்டோ

முதல் முறையாக இரு மருமகன்களுடன் ரஜினி: வைரலாகும் போட்டோ
, வெள்ளி, 1 மார்ச் 2019 (20:17 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்களுக்கு வெளியான பேட்ட படத்தின் 50 வது நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. 
 
ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் சிம்ரன் மற்றும் திரிஷா நடித்திருந்தனர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
 
இந்த படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் கேக் கட்டிங்யோடு கொண்டாப்பட்டது. இந்த விழாவில் இந்த விழாவில் பாபி சிம்ஹா, அனிருத், மேகா ஆகாஷ் மற்றும் படத்தில் நடித்த பலர் கலந்துக்கொண்டனர். ரஜினியின் மருமகன்களான தனுஷ் மற்றும் விசாகன் கலந்துக்கொண்டர். 
 
ரஜினி தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தையும், 50 வது நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சன்பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 
ரஜினி தனது இரு மருமகன்களுடன் இருக்கும் முதல் புகைப்படம் இது என கூறப்படுகிறது. எனவே இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
webdunia

                                                 Picture Courtesy: SUN PICTURES

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

90 எம்எல்: சினிமா விமர்சனம்!