Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலையை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள்… ரஜினிகாந்த் சிலாகிப்பு!

vinoth
சனி, 12 ஜூலை 2025 (12:50 IST)
கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வெகுஜன வாசகப்பரப்பில் அதிகளவில் வாசகர்களைக் கவர்ந்த நாவலாக இருப்பது மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவல். இந்த நாவலை இயக்குனர் ஷங்கர் திரைப்படமாக இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த நாவல்  ஒரு லட்சம் பிரதிகள் விற்றுள்ளதைக் கொண்டாடும் விதமாக சென்னையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி விகடன் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

விழாவில் அவர் பேசும்போது “தமிழ் சினிமாவில் கதை சொல்லலில் மாற்றத்தைக் கொண்டுவந்தவர்கள் மூன்று பேர். பாரதிராஜா, மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியவர்கள். ஷங்கர் படங்களில் பிரம்மாண்டம் மட்டும் இருக்காது. சமூகக்கருத்துகளும் இருக்கும். கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள். சாதி, இன, மதம் என எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments