Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீனாவுக்கு இன்னமும் என் மேல் கோபம் உள்ளது… ஓப்பனாக பேசிய ரஜினிகாந்த்

மீனாவுக்கு இன்னமும் என் மேல் கோபம் உள்ளது… ஓப்பனாக பேசிய ரஜினிகாந்த்
, புதன், 12 ஏப்ரல் 2023 (14:16 IST)
1999 ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம் அவரின் திரை வாழ்க்கையில் இமாலய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. இந்த படத்தின் இமாலய வெற்றியால் அடுத்து அதை விட பெரிய படமாக கொடுக்க வேண்டும் என ரஜினி 2 ஆண்டுகள் இடைவெளி எடுத்துதான் பாபா படத்தை உருவாக்கினார்.

இப்போது கூட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் படையப்பா நல்ல டி ஆர் பி யை பெற்றுவருகிறது. இந்நிலையில் படையப்பா படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் அளித்த நேர்காணலில் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது மீனா. ஆனால் அவரின் குழந்தை முகம் வில்லி வேடத்துக்கு செட் ஆகாது என்பதால் ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரி ஆக்கினோம் எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இப்போது மீனா 40 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் இந்த சம்பவத்தைப் பற்றி பேசும்போது “மீனாவுக்கு அந்த வேடத்தைக் கொடுக்கவில்லை என இப்போதும் அவர் கோபத்தில் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்படி என்னதான் இருக்கோ… லவ் மூடுக்கு சென்ற செல்வராகவன்!