Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்க தலைவர் உட்கார வேண்டிய நாற்காலி… வேலையைக் காட்டும் ரஜினி ரசிகாஸ்!

Advertiesment
Tamilnadu
, திங்கள், 17 மே 2021 (16:30 IST)
நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து கொரோனா பேரிடர் கால நிவாரண நிதியை அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ அவசர செலவினங்களுக்காக நிவாரண நிதி வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி பல தொழிலதிபர்களும், திரை பிரபலங்களும் முதல்வர் நிவாரண நிதியில் நிதியளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் இன்று முதல்வர் அலுவலகம் சென்று ஸ்டாலினை சந்தித்த புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தை பகிரும் ரஜினி ரசிகர்கள் ‘எங்க தலைவர் மட்டும் தேர்தலில் நின்னிருந்தார், ஸ்டாலின் இருக்கும் நாற்காலியில் அவர்தான் உட்கார்ந்திருப்பார். அப்போது ஸ்டாலின் நிவாரணம் கொடுக்க ரஜினியை தேடி வந்திருப்பார்’ என உருட்ட ஆரம்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே கம்பெனிக்கு ஆறாவது படம்… தேதிகளை வாரி வழங்கும் தனுஷ்