Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு உதவி செய்யும் ராகவா லாரன்ஸ்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (17:15 IST)
தமிழ் திரையுலகினர்களுக்கு மட்டுமின்றி தமிழ் மக்களுக்கும் ஏராளமான உதவியை செய்து வருபவர் ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே. குறிப்பாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நிவாரண நிதியாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலமான தீப்பெட்டி கணேசன் குடும்பத்தினருக்கும் உதவி செய்வதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அவரது குடும்பம் வறுமையில் வாடிய போது அவரது குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்து வந்த ராகவா லாரன்ஸ் அந்த உதவி தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டேன். இனிவரும் காலத்திலும் என்னால் இயன்ற அளவு உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன்?.,. தீயாய்ப் பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments