Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய உதயநிதி!

நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய உதயநிதி!
, திங்கள், 22 மார்ச் 2021 (16:08 IST)
பில்லா 2, கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் உடல்நலக்குறைவால் காலமான சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, ரேணிகுண்டா, கோலமாவு கோகிலா, பில்லா 2 என பல படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். துணை கதாப்பாத்திரங்களே ஏற்று நடித்திருந்தாலும் அதிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தீப்பெட்டி கணேசன். மதுரையை சேர்ந்த தீப்பெட்டி கணேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக இயக்குனர் சீனுராமசாமி வருத்ததுடன் பதிவிட்டுள்ளார். தீப்பெட்டி கணேசன் மறைவுக்கு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட அவரது உடலுக்கு நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இருவரும் கண்ணே கலைமானே படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'கர்ணன்' பட டீசர் குறித்து எச்சரிக்கை விடுத்த இயக்குநர் !