Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராதே ஷ்யாம் படத்தை ஓடிடிக்கு இழுக்க முயற்சி… தயாரிப்பாளர்களின் முடிவு!

Advertiesment
ராதே ஷ்யாம் படத்தை ஓடிடிக்கு இழுக்க முயற்சி… தயாரிப்பாளர்களின் முடிவு!
, புதன், 23 ஜூன் 2021 (12:44 IST)
நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டெ நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தை எப்படியாவது ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

சாஹோ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம்.. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்டமான படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் படம் என சொல்லப்பட்டது. ஆனாலும் பிரபாஸின் சம்பளம் எல்லாம் சேர்த்து மொத்தமாக 300 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளது.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து போஸ் ப்ரடொக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக அதிக படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் நிலையில் இதை எப்படியாவது தங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டுமென்று பல முன்னணி நிறுவனங்கள் முயன்றுள்ளன. ஆனால் அதை தயாரிப்பாளர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் நடிச்ச கேங்ஸ்டர் படங்கள் எல்லாமே ப்ளாப்தானாம்… அப்பயும் விடா முயற்சியோட இருக்காரே!