Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்று டோஸ் போடணும், 92% திறன் வாய்ந்தது! – க்யூபாவின் அப்டலா தடுப்பூசி!

மூன்று டோஸ் போடணும், 92% திறன் வாய்ந்தது! – க்யூபாவின் அப்டலா தடுப்பூசி!
, புதன், 23 ஜூன் 2021 (10:06 IST)
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் க்யூபாவின் தடுப்பூசி 92% திறன் கொண்டதாக உள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பாதிப்புகளை தடுக்க கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு செலுத்தி வரும் நிலையில் க்யூபாவும் புதிய தடுப்பூசியை கண்டறிந்துள்ளது.

க்யூபாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டறியப்பட்டுள்ள அப்டலா தடுப்பூசி கொரொனாவுக்கு எதிராக 92% திறனுடன் செயல்படுவதாக அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ் செலுத்தி கொள்ளும் வகையில் உள்ள நிலையில், அப்டலா தடுப்பூசி மூன்று டோஸ் எடுத்துக் கொள்ளும் வகையில் உள்ளது.

இந்த அப்டலா தடுப்பூசியை க்யூபா மருத்துவ நிபுணர்கள் 13 மாதங்களில் தயாரித்து சாதித்துள்ளதாக க்யூபா அதிபர் மிகுவெல் தியாஸ் கானெல் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் இந்தியர்களுக்கு துபாயில் அனுமதி! கட்டுப்பாடுகள் விதித்த அமீரகம்!