Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்னிந்திய படங்கள் பத்தி தப்பா பேசினேனா? – ராஷிக் கண்ணா விளக்கம்!

தென்னிந்திய படங்கள் பத்தி தப்பா பேசினேனா? – ராஷிக் கண்ணா விளக்கம்!
, புதன், 6 ஏப்ரல் 2022 (13:52 IST)
தென்னிந்திய படங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிதாக வெளியான தகவல் குறித்து நடிகை ராஷிக் கண்ணா விளக்கமளித்து பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷிக் கண்ணா. தமிழில் அயோக்யா, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வரும் ராஷிக் கண்ணா சமீபத்தில் அஜய் தேவ்கன் நடித்து வெளியான இணைய தொடரான “ருத்ரா”விலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தென்னிந்திய சினிமா குறித்து ராஷிக் கண்ணா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து விளக்கமளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஷிக் கண்ணா ”தென்னிந்திய சினிமாக்கள் குறித்து நான் தவறாக பேசியதாக சில ஜோடிக்கப்பட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிரது. இதை யார் செய்தாலும் உடனே இதை நிறுத்துங்கள். நான் அனைத்து மொழி படங்களையும் மதிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி66: சூப்பர் வைரலாகும் ராஷ்மிகா - விஜய் கியூட் புகைப்படங்கள்!