Publish Date: Wed, 06 Apr 2022 (11:55 IST)
Updated Date: Wed, 06 Apr 2022 (12:58 IST)
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது.
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் இடுப்பு லைட்டா காட்டி எல்லோரையும் வளைத்துபோட்டுவிட்டார். அம்மணிக்கு லைக்ஸ் குவிந்துதள்ளியுள்ளது.