Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐதராபாத்தில் புஷ்பா 2 டீசர் ஷூட்… வெளிநாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு!

ஐதராபாத்தில் புஷ்பா 2 டீசர் ஷூட்… வெளிநாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு!
, வியாழன், 3 நவம்பர் 2022 (10:34 IST)
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் ஷூட்டிங் விரைவில் நடக்க உள்ளது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது.

குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து இரண்டாம் பாகம் இன்னும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. சில மாதங்களாக திரைக்கதை வேலைகள் நடந்து வந்த நிலையில், இந்த மாதம் 7 ஆம் தேதி ஐதராபாத்தில் படத்தின் டீசருக்கான ஷூட் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் சில நிமிடங்களில் ‘வாரிசு’ அப்டேட்: தயாரிப்பு நிறுவனம் டுவிட்!