Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட இன்னும் திரைக்கதையே ரெடி ஆகலிங்க… புஷ்பா 2 பற்றி வெளியான தகவல்!

அட இன்னும் திரைக்கதையே ரெடி ஆகலிங்க… புஷ்பா 2 பற்றி வெளியான தகவல்!
, புதன், 2 நவம்பர் 2022 (09:08 IST)
புஷ்பா முதல் பாகம் ரிலீஸ் ஆகி ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில் இன்னும் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கவில்லை.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து இரண்டாம் பாகமான புஷ்பா தி ரைஸ் படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதற்காக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் பூஜை நடைபெற்றாலும், இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. இதற்குக் காரணம் படத்தின் இறுதி வடிவ திரைக்கதை இன்னும் முழுமை அடையாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் நவம்பர் மாதம் திட்டமிட்டு இருந்த ஷூட்டிங் டிசம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா பங்களாதேஷ் போட்டியில் தமிழ் வரணனை செய்யும் காபி வித் காதல் குழு!