Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஹத் பாசில் ஷூட்டிங் முடிந்தது… புஷ்பா 2 படக்குழு அறிவிப்பு!

பஹத் பாசில் ஷூட்டிங் முடிந்தது… புஷ்பா 2 படக்குழு அறிவிப்பு!
, வெள்ளி, 19 மே 2023 (08:56 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இரண்டாம் பாகமான புஷ்பா தி ரைஸ் படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து தற்போது இரண்டாம் பாகத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அல்லு அர்ஜுன் போல சேலை அணிந்து மேக்கப் எல்லாம் போட்டு முரட்டு உருவமாக காணப்பட்டார். இந்நிலையில் இப்போது அடுத்த கட்ட ஷூட்டிங் இலங்கை மற்றும் மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் நடக்க உள்ளதாம். அங்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களோடு அல்லு அர்ஜுன் மோதும் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்க உள்ளாராம்.

முதல் பாகத்த்தில் பன்வர் சிங் பெஷாவர் ஆக நடித்த பஹத் பாசில் இந்த பாகத்திலும் வில்லனாக வருகிறார். அந்த வகையில் இப்போது அவருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று வெளியாகும் NTR 30 படத்தின் முதல் லுக் போஸ்டர்!