Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“மரண வீட்டில் கூட காமிரா வைத்து காசு பார்க்க ஒரு கூட்டம் வந்துவிட்டது..” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை!

“மரண வீட்டில் கூட காமிரா வைத்து காசு பார்க்க ஒரு கூட்டம் வந்துவிட்டது..” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை!
, வியாழன், 21 செப்டம்பர் 2023 (10:03 IST)
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது இறுதி நிகழ்வுக்கு வந்த சினிமா பிரபலங்களை மீடியாக்கள் சூழ்ந்து அவர்களின் கருத்துகளைப் பேசவைத்து ஒளிபரப்பி வந்தன. ஒரு கட்டத்தில் இந்த சம்பவங்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தன. இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து பதிவுகளை எழுதியிருந்தன.

அந்த வகையில் இப்போது தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சியின் பதிவு கவனம் பெற்றுள்ளது. அவரது முகநூல் பக்கத்தில் “மரண வீட்டில் கூட காமிரா வைத்து காசு பார்க்க ஒரு கூட்டம் வந்துவிட்டது.. மீடியா என்ற பெயரில் சிலரும்... மீடியா இல்லாமல் செல்போனைத் தூக்கிக் கொண்டு படம்பிடிக்கும் பலரும் பெருகிவிட்டார்கள். நமது இழப்பு அவர்களுக்கு லைக்கும்... காசும். நமது துக்கத்தை அவர்களது துக்கமாக பார்க்கத் தவறுகிறார்கள்.

துக்க வீட்டிலாவது இனி காமிரா அனுமதியில்லை என்ற முடிவெடுக்க வேண்டும். நம் வீட்டில் நாம் யாரை அனுமதிக்க வேண்டும். கூடாது என்ற முடிவையாவது அனைவரும் இணைந்து எடுக்க வேண்டும். இல்லையேல் துக்க வீட்டைக் கூட கொண்டாட்ட நிகழ்வு போல மாற்றிவிடுகிறார்கள். கொடுமையான நிகழ்வு இது. இதுபோன்ற நிகழ்வுகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று.” என வேதனையைப் பகிர்ந்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாக சைதன்யாவின் அடுத்த படத்தில் இணைந்த சாய் பல்லவி!