Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சலார் 2 என்ன ஆச்சு?... நடிகர் பிரித்விராஜ் கொடுத்த அப்டேட்!

Advertiesment
சலார் 2 என்ன ஆச்சு?... நடிகர் பிரித்விராஜ் கொடுத்த அப்டேட்!

vinoth

, செவ்வாய், 25 மார்ச் 2025 (10:10 IST)
பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பிருத்விராஜ் நடித்த சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  ஆனால் ரிலீஸுக்குப் பின் நடந்ததுதான் எதிர்பாராதது. படம் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

முதல் பாகத்தின் தோல்வியால் இரண்டு பாகங்களாக உருவான சலார் படத்தின் இரண்டாம் பாகம் பிறகு தொடங்கப்படவில்லை. சலார் முதல் பாகத்தின் தோல்வியால் இரண்டாம் பாகத்தை கைவிடப்போவதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படக்குழு அதை மறுத்தது. சலார் 2 படத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ‘சலார்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்த பிரித்விராஜ் இப்போது அந்த படம் பற்றி பேசியுள்ளார். அதில் “பிரபாஸ் தற்போது ஸ்பிரிட் படத்தைத் தொடங்கவுள்ளார். பிரசாந்த் ஜூனியர் என் டி ஆர் பட வேலைகளில் பிஸியாக உள்ளார். நானும் எனது அடுத்தடுத்த பட வேலைகளில் உள்ளேன். அதனால் நாங்கள் மூவரும் எங்கள் படங்களை முடித்ததும் சலார் 2 தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் சுந்தர் சி மோதலா?.. நின்ற படப்பிடிப்பு!