Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ் காட்டும் கேஜிஎப் 2 எதிர்பார்ப்பு – மலையாள உரிமையை வாங்கிய நடிகர்!

மாஸ் காட்டும் கேஜிஎப் 2 எதிர்பார்ப்பு – மலையாள உரிமையை வாங்கிய நடிகர்!
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:41 IST)
கேஜிஎப் 2 படத்தின் மலையாள ரிலீஸ் உரிமையை நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றியுள்ளார்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது.

எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக இந்த படத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளைப் படக்குழு படமாக்கியது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 8 ஆம் தேதி டீசரை ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் மலையாள திரையரங்க உரிமையை நடிகர் பிருத்விராஜ் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளாராம். இதுகுறித்து அறிவித்துள்ள பிருத்விராஜ் புரொடக்‌ஷன் நிறுவனம் ‘நாங்கள் கே.ஜி.எஃப் படத்தின் மிகப்பெரிய ரசிகர்கள். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றை நான் வழங்குவதற்கான பாக்கியத்தைப் பெறுவதை விட சிறந்த வழி எதுவும் இல்லை. எங்கள் நிறுவனம் இந்த படத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் போலவே நானும் ராக்கியை காண ஆவலில் இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சல்மான் கான் படமும் ஓடிடி ரிலீஸா? பதறிய திரையரங்க உரிமையாளர்கள் கடிதம்!