96 என்ற மென்சோகப் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட ரிலீஸின் போதே அவர் தன்னுடைய அடுத்த படம் 96 படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்தார்.
இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோரே நடிப்பார்கள் என்றும் இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் தயாரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டு, அதே நிறுவனத்துக்காக விக்ரம்மை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் அந்த படமும் தள்ளிவைக்கப்பட்டு தற்போது அவர் ஃபஹத் பாசில் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் உள்ளார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படம் பற்றி பேசியுள்ள ஐசரி கணேஷ் “பிரேம்குமாரின் முதல் இரண்டு படங்களுமே எனக்குப் பிடிக்கும். அடுத்து ஃபஹத் பாசிலை வைத்து அவர் இயக்கும் படம் இன்னொரு ஆவேஷம் படம் போல இருக்கும்” எனக் கூறியுள்ளார்.