பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

vinoth
செவ்வாய், 21 அக்டோபர் 2025 (14:04 IST)
கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமானது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் அதில் ஜூனியர் என் டி ஆர் கலந்துகொண்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். மேலும் டோவினோ தாமஸ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது திரைக்கதையை செப்பனிடும் பணியை பிரசாந்த் நீல் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக தன் படங்களின் படப்பிடிப்பு பகுதியளவு முடிந்ததும் பிரசாந்த் நீல் திரைக்கதையை செதுக்குவது வழக்கம்தானாம். அதே போல படத்தின் நாயகன் ஜூனியர் என் டி ஆரும் ஷூட் செல்வதற்கு முன்னால் திரைக்கதையை முழுவதும் முடித்து விடுங்கள் எனக் கூறியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்துடன் மீண்டும் நடிக்க ஆசை… பிரபல பாலிவுட் நடிகர் விருப்பம்!

‘அரசன்’ ப்ரோமோவைக் கொண்டாடித் தள்ளிய ரசிகர்கள்… 20 மில்லியன் பார்வைகள்!

துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்னடா வார்த்தையே புரியல… இணையத்தில் ட்ரோல் ஆகும் கருப்பு முதல் சிங்கிள் பாடல்!

தொடங்கியது கவினின் ‘மாஸ்க்’ பட வியாபாரம்… டிஜிட்டல் உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments