Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊசிக்கு பயப்படும் ஆக்‌ஷன் பட இயக்குனர்…. இணையத்தில் கவனம் பெற்ற புகைப்படம்!

ஊசிக்கு பயப்படும் ஆக்‌ஷன் பட இயக்குனர்…. இணையத்தில் கவனம் பெற்ற புகைப்படம்!
, வியாழன், 10 ஜூன் 2021 (07:48 IST)
இயக்குனர் பிரசாந்த் நீல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்போது தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவராகியுள்ளார் பிரசாந்த் நீல்.

அடுத்து பிரபாஸை வைத்து சலார் திரைப்படத்தையும், அதன் பின்னர் ஜூனியர் என் டி ஆரோடு ஒரு படத்தையும் இயக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இவர் அதைப் பார்க்க பயந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு இருக்கும் புகைப்படம்தான் அது. வரிசையாக ஆக்‌ஷன் படங்களில் லிட்டர் கணக்கில் ரத்தம் தெறிக்கும் படங்களாக இயக்கி வரும் இயக்குனர் ஊசிக்கு பயப்படுவதா என ரசிகர்கள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான்காவது முறையாக திருமணமா? வனிதா விஜயகுமார் விளக்கம்