Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேஜிஎப் நடிகருடன் கூட்டணி அமைக்கும் தெலுங்கு முன்னணி இயக்குனர்!

கேஜிஎப் நடிகருடன் கூட்டணி அமைக்கும் தெலுங்கு முன்னணி இயக்குனர்!
, வியாழன், 3 ஜூன் 2021 (16:55 IST)
இயக்குனர் பூரி ஜெகன்னாத் கேஜிஎப் நடிகர் யாஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் யாஷின் அடுத்த படம் எது என்பது குறித்த கேள்வி எழுந்த நிலையில் அவர் தெலுங்கின் முன்னணி நடிகரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரமணா படத்துக்கு அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட இளையராஜா!