Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெட்ரோ படத்துக்காக முதல் முறையாக அந்த முயற்சியை செய்யும் பூஜா ஹெக்டே… தேசிய விருதுக்குக் குறியா?

Advertiesment
ரெட்ரோ படத்துக்காக முதல் முறையாக அந்த முயற்சியை செய்யும் பூஜா ஹெக்டே… தேசிய விருதுக்குக் குறியா?

vinoth

, செவ்வாய், 11 மார்ச் 2025 (13:00 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் பூஜா நடித்துள்ளாராம். இதனால் இந்த படத்துக்கு அவரே தன்னுடைய சொந்தக் குரலில் தமிழிலும் டப்பிங் பேசவுள்ளாராம். நடிகர்கள் தங்கள் சொந்தக் குரலில் டப்பிங் பேசினால் மட்டுமே தேசிய விருது உள்ளிட்ட விருதுகளில் அவர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்படும் என்பதால், தேசிய விருதுக்காக இந்த முயற்சியை பூஜா ஹெக்டே மேற்கொள்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஷ்மிகாவுக்குப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை… சாதியப் பிரச்சனையாக மாறும் விவகாரம்!