Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் – ஜோதிகா தடாலடி கருத்து!

Advertiesment
தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் – ஜோதிகா தடாலடி கருத்து!

vinoth

, சனி, 8 மார்ச் 2025 (14:10 IST)
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

இதையடுத்து பாலிவுட்டில் ஷைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் போலாவின் பயோபிக் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டப்பா கார்டெல்’ என்ற தொடர் ரிலீஸானது.

இது சம்மந்தமாக அவர் அளித்துள்ள நேர்காணலில் பேசும்போது “தென்னிந்தியா சினிமா அதிககும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாகவே உள்ளது. நான் சினிமாவுக்கு வந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாதிரி கதைகளில் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.  இயக்குனர்கள் ஆண்களை மையப்படுத்தியேக் கதைகளை எழுதுகிறார்கள்.  தென்னிந்திய சினிமாவில் ஒரு பெண்ணின் பயணம் என்பது மிகவும் கடினமானதாகியுள்ளது.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘சாமி, உங்களால் இந்தியாவுக்கே பெருமை’… இளையராஜாவுக்கு ரஜினிகாந்தின் வாழ்த்து!