Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுவையில் இருந்து ஐதராபத்திற்கு ஷிப்ட் ஆகிய ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு!

புதுவையில் இருந்து ஐதராபத்திற்கு ஷிப்ட் ஆகிய ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு!
, வியாழன், 29 ஜூலை 2021 (08:36 IST)
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புதுவையில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் ஐஸ்வர்யாராய் விக்ரம் கார்த்திக் உள்பட பலர் நடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது புதுவையில் நடந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த படப்பிடிப்பிலும் ஐஸ்வர்யாராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஐதராபத்தில் நடைபெறும் படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’வாணி ராணி’ சீரியல் நடிகர் மருத்துவமனையில் அனுமதி: கோமா என தகவல்!