Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்லா ஹீரோக்களுக்கும் போன் போடும் மணிரத்னம் – பரபரப்பாகும் பொன்னியின் செலவ்ன் படக்குழு!

எல்லா ஹீரோக்களுக்கும் போன் போடும் மணிரத்னம் – பரபரப்பாகும் பொன்னியின் செலவ்ன் படக்குழு!
, ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (18:41 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். ஆனால் சில பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இப்போது ஜனவரி மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் ஸ்டுடியோவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக படத்தில் நடிக்கும் அனைத்து ஹீரோக்களிடமும் தேதிகளை வாங்கியுள்ளாராம் மணிரத்னம். அதனால் இந்த முறை எந்த தடங்கலும் இல்லாமல் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேன் படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!