Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாண்டிச்சேரியில் தொடங்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு!

பாண்டிச்சேரியில் தொடங்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு!
, சனி, 17 ஜூலை 2021 (16:57 IST)
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருகிறதாம். அங்கு சில காட்சிகளை படமாக்கிவிட்டு அங்கிருந்து ஐதராபாத் சென்று மீதமுள்ள மொத்தக் காட்சிகளையும் படமக்க உள்ளதாம் படக்குழு. அதோடு மொத்த படப்பிடிப்பும் முடிகிறதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலிமை டீசர் ரிலீஸ் தேதி இதுதான்… ரிலிஸ் தேதியிலும் மாற்றம்!