Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டைத் தவிர பிறமாநிலங்களில் டல்லடிக்கும் பொன்னியின் செல்வன்!

தமிழ்நாட்டைத் தவிர பிறமாநிலங்களில் டல்லடிக்கும் பொன்னியின் செல்வன்!
, வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (08:38 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் நாட்டுக்கு வெளியே பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தவில்லை.

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ளது. தொடர்ந்து பல காட்சிகள் முன்பதிவிலேயே முழுவதும் புக் ஆகியுள்ளன. ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே பெரிதாக இந்த படத்துக்கு முன்பதிவுகள் நடக்கவில்லை. பட ரிலீஸுக்கு பின்னர் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வெளியானால் ரசிகர்கள் கூட்டம் மேலும் அதிகமாகும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷ்ணுவர்தன் இயக்கும் தமிழ் படத்தில் அதிதி ஷங்கர்?