Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

300 கோடி வசூல் மைல்கல்லை எட்டிய பொன்னியின் செல்வன் 2!

300 கோடி வசூல் மைல்கல்லை எட்டிய பொன்னியின் செல்வன் 2!
, செவ்வாய், 9 மே 2023 (07:30 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இரண்டு பாகமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 400 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் பல பகுதிகளில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் ஓடி வருகிறது. ஆனால் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

10 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் ரூ.300 கோடி வசூல்!