Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“நாவலை படமாக்கினால் குறைகள் இருக்கதான் செய்யும்…”- பொ.செ. விமர்சனம் குறித்து பார்த்திபன் கருத்து!

“நாவலை படமாக்கினால் குறைகள் இருக்கதான் செய்யும்…”- பொ.செ. விமர்சனம் குறித்து பார்த்திபன் கருத்து!
, திங்கள், 1 மே 2023 (15:32 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இரண்டு பாகமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. மேலும் மக்கள் ஆதரவும் முதல் பாகத்துக்கு கிடைத்த அளவுக்கு இல்லை. படத்தின் க்ளைமேக்ஸ் மற்றும் பல பகுதிகள் ரசிகர்களுக்கு திருப்தியாய் இல்லை என தெரிகிறது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள பார்த்திபன் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் “ஒரு நாவலைப் படமாக்கும் போது அதிருப்திகள் இருக்கதான் செய்யும். காட்சிகள் வேக வேகமாக துண்டிக்கப்படுகிறது. ஒரு படைப்பாளியாக சில சிரமங்களை நானும் உணர்கிறேன். இந்த படத்தை எடுத்ததற்கே நாம் மணிரத்னத்தைப் பாராட்ட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லாத்தையும் காட்டி எல்லைமீறி போஸ் கொடுத்த கோமாளி நடிகை - பிகினி ஹாட் பிக்ஸ்!