Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’விக்ரம்’ படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்த சென்னை காவல்துறை!

’விக்ரம்’ படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்த சென்னை காவல்துறை!
, வெள்ளி, 29 அக்டோபர் 2021 (18:26 IST)
உலகநாயகன் கமல்ஹாசனின் ’விக்ரம்’ படப்பிடிப்பிற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ள தகவல் தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளது
 
உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை காரைக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு சில முக்கிய காட்சிகள் சென்னையில் உள்ள எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு அனுமதி கேட்டு காவல் துறைக்கு கடிதம் எழுதினார் 
 
ஆனால் அந்த கடிதத்திற்கு பதில் அனுப்பி உள்ள காவல்துறை சென்னை போலீஸ் அருங்காட்சியகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க முடியாது என்றும் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் எந்த படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது என்று பதில் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு திறமையான நடிகரை விதி பறித்துவிட்டது: டுவிட்டரில் இரங்கல் தெரிவித்த மோடி!