Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச படவிழாவில் பங்கேற்ற பரியேறும் பெருமாள்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (19:39 IST)
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த குரலை, ஒலிப்பெருக்கி வைத்து ஒலிக்க செய்த பரியேறும் பெருமாள் திரைப்படம் சர்வதேச விழாவில் பங்கேற்கவுள்ளது.
 
இயக்குநர்கள் ராம் மற்றும் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மாரி செல்வராஜ் இந்தத் திரைப்படத்தை இயக்கினார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் இதனை தயாரித்திருந்தார். கதிர், ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
 
பல பிரபலங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பெற்ற பரியேறும் பெருமாள் ஒரு மாதத்தைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழகம் தவிர்த்து, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் திரையிடப்பட்டு அங்குள்ள ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
 
இந்நிலையில், இந்தத் திரைப்படம், கோவாவில் நடைபெறும் 49-வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை பரியேறும் பெருமாளின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments