Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவர்ஸ்டார் முன்னாள் மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்த ரசிகர்கள்

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (20:52 IST)
தெலுங்கு திரையுலகின் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் பவன்கல்யாண். சினிமா ,அரசியல் என இரண்டு துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டி வரும் இவருக்கு சொந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை.
 
1997ஆம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இரண்டு ஆண்டுகளில் இவரை விவாகரத்து செய்து அதன் பின்னர் ரேணு தேசாய் என்ற பெண்ணை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2012ஆம் ஆண்டு ரேணுவையும் விவாகரத்து செய்துவிட்டு தற்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
 
இந்த நிலையில் பவன்கல்யாணிடம் இருந்து விவாகரத்து பெற்ற ரேணு தேசாய், ஆறு வருடங்களுக்கு பின்னர் தற்போது மறுமணம் செய்யவுள்ளார். சமீபத்தில் இவர் தன்னுடைய டுவிட்டரில் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 
 
ஆனால் ரேணு திருமணம் செய்யக்கூடாது என்று அவ்வாறு திருமணம் செய்தால் அவரை கொலை செய்வோம் என்றும் பவன்கல்யாண் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ரேணு போலீஸ் புகார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சம்மர் வெக்கேஷன் போட்டோஷூட்டை வெளியிட்ட பிரியங்கா மோகன்!

ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் ‘ப்ளாக் மேஜிக்’ போட்டோஷூட் ஆல்பம்!

அழகுப் பதுமையாக மாறிய எஸ்தர் அனில்… கண்கவர் போட்டோ ஆல்பம்!

மீண்டும் தொடங்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ’எல் ஐ சி’ பட ஷூட்டிங்!

மோகன் லால் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான எம்பூரான் பட போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments