Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆணாதிக்கம் உள்ள படத்தில் என்னால் பணியாற்ற முடியாது: நடிகை வரலட்சுமி!

ஆணாதிக்கம் உள்ள படத்தில் என்னால் பணியாற்ற முடியாது: நடிகை வரலட்சுமி!
, செவ்வாய், 28 மார்ச் 2017 (11:57 IST)
நடிகை வரலட்சுமி மலையாளத்தில் ‘கஸாபா’ என்ற ஒரு படத்தில் மம்முட்டியோடு நடித்தார். இதில் தாதா கேரக்டர் தான். மலையாளத்தில் நல்ல பேர் பெற்றுத்தந்த அந்தப்படத்துக்கு பின்னர், மலையாளத்தில் படவாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. 

 
சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்த படம் அப்பா. இதில் அப்பாவாக நடித்திருந்தார் சமுத்திரக்கனி. இந்நிலையில்  அவர் அப்பா படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்கிறார். சமுத்திரக்கனி இயக்கும் முதல் மலையாள படமான இதற்கு ‘ஆகாச   மிட்டாய்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இப்படத்தில் ஜெயராம் ஹீரோவாக நடிக்க, வரலட்சுமி அவர் மனைவியாக நடிக்க உள்ள அந்த படத்தின் தொடக்க விழா  நடந்தது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து வரலட்சுமி திடீரென விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து,  வரலட்சுமியே தனது விளக்கத்தை கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறும்போது, ஆணாதிக்கம், நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதற்கு என்னால் முடியாது  கூறி வெளியே வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரவணன் இருக்க பயமேன் பட டிரைலர்!