Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரௌபதி படத்தை பார்ப்பாரா ரஞ்சித்? பரபரப்பு தகவல்

திரௌபதி படத்தை பார்ப்பாரா ரஞ்சித்? பரபரப்பு தகவல்
, செவ்வாய், 3 மார்ச் 2020 (21:30 IST)
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது படங்களில், தான் சார்ந்த ஜாதியைச் உயர்த்தும் காட்சிகளை அதிகம் வைக்கும் வழக்கம் உடையவர் என ஒரு குற்றச்சாட்டாக பரவலாக உள்ளது. இந்த நிலையில் நாடக காதல் குறித்த திரைப்படமான திரௌபதி சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்த படத்தை பா ரஞ்சித் பார்க்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
சமீபத்தில் வெளியான ஆணவக்கொலை திரைப்படமான கன்னிமாடம் என்ற படத்தை பார்த்து பாராட்டிய பா ரஞ்சித் இந்த படத்தையும் பார்த்து தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது 
 
இந்த நிலையில் திரௌபதி படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே கோபி அவர்கள் தனது டுவிட்டரில் ’அம்பேத்காரின் அனைவரும் சமம் என்ற கொள்கையை பா ரஞ்சித் கடைபிடிப்பவராக இருந்தால் தனது திரௌபதி படத்தை அவர் பார்க்க வேண்டும் என்றும் அவருக்கு அழைப்பு விடுக்க நேரடியாக அணுகிய போது அவரை அணுக முடியவில்லை என்றும் இதனால் டுவிட்டர் மூலம் அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார். அவரது இந்த டுவிட்டை இயக்குனர் ஜி.மோகன் ரீரீட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரௌபதி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அழைப்பை ஏற்று அந்த படத்தை பா ரஞ்சித் பார்த்து தனது கருத்தை தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யாவை பார்த்தாலே என் மனது வலிக்கிறது: சாயிஷாவின் வேதனை டுவிட்