Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிட மாட்டோம்… திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு!

ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிட மாட்டோம்… திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு!
, வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:32 IST)
ஓடிடியில் வெளியான படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் திரையரங்குகள் இயங்கியது சில மாதங்களே. கொரோனா காரணமாக திரையரங்குகள் இயங்குவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகின. ஓடிடியில் வெளியான படங்கள் சில நல்ல வரவேற்பைப் பெற்றதோடு திரையரங்கில் அவற்றைப் பார்க்கும் வாய்ப்பு இழந்துவிட்டதாகவும் ஏக்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

அதனால் சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை மீண்டும் திரையில் வெளியிடவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இப்போது ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷால் படத்தில் ஒப்பந்தமான நடிகை… பல ஆண்டுகளுக்குப் பின் வாய்ப்பு!