Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டாம் பாகம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ஏஆர் முருகதாஸ் உறுதி

இரண்டாம் பாகம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ஏஆர் முருகதாஸ் உறுதி
, திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (09:44 IST)
என்னுடைய எந்த திரைப்படத்தையும் இரண்டாம் பாகம் எடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார் 
 
ஏஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி, துப்பாக்கி, கத்தி உள்பட ஒரு சில திரைப்படங்கள் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அவர் இயக்கிய முதல் படமான ‘தீனா’ குறித்த இரண்டாம் பாகம் தகவல்களும் வெளிவந்தன.
 
மேலும் ’தளபதி 65’ படத்தை இயக்க இருக்கும் ஏஆர் முருகதாஸ், அந்த படத்திற்கு ’துப்பாக்கி 2’ என்று டைட்டில் வைக்க இருப்பதாகவும் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த படம் என்றும் கூறப்பட்டது 
 
ஆனால் சமீபத்தில் பேட்டியளித்த ஏஆர் முருகதாஸ் அவர்கள் ’என்னுடைய எந்த படத்தையும் இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியா தனக்கு இல்லை என்றும் தன்னுடைய படத்தின் கதை அந்தப் படத்தோடு முடிந்துவிடும் என்றும் கூறியுள்ளார். மேலும் தளபதி 65 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இந்த படம் ‘துப்பாக்கி 2’ படம் என்று வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களோட அதை என்மீது போர்த்தி சூடேற்றுங்கள் - முகம் சுளிக்க வைத்த மீரா மிதுன்!