Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எத்தனை தடை வந்தாலும் ’’ஈஸ்வரன்’’ ரிலீஸ் ஆகும் - படக்குழு

எத்தனை தடை வந்தாலும் ’’ஈஸ்வரன்’’ ரிலீஸ் ஆகும் - படக்குழு
, வியாழன், 7 ஜனவரி 2021 (17:53 IST)
நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம்  பொங்கல் பண்டிகையொட்டி வெளியிட தயாரானதால் பொங்கலுக்கு ரிலிஸாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையில் உருவான திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நேற்று சென்சார் ஆனதாகவும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனவரி 14ஆம் தேதி ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகும் என்றும் ஜனவரி இரண்டாம் தேதி இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் அறிவித்தார். அவர் கூறியபடி பாடல்கள் வெளியான நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு விஜய்யின் கோரிக்கை ஏற்று தியேட்டர்களொஇல் 100%  அனுமதியளித்தது. இதற்கு ஆதரவாகவும்  எதிராகவும் பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துகளை எழுப்பி வந்த நிலையில், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வரிசைப்படிதான் வழக்கை விசாரிக்க முடியும் என நீதிமன்றம் கூறிவிட்டது.

மேலும், தியேட்டர் அதிபர்கள், பொங்கலுக்கு 50% அனுமதி கிடைத்தால் அதில் மாஸ்டர் படத்தை மட்டுமே திரையிடுவதாக அறிவித்தனர். இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து படக்குழுவினர் கூறியுள்ளதாவது: எத்தனை சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதியளித்தாலும் ஈஸ்வரன் பொங்கலுக்கு ரிலீஸாகும். மேலும் பொங்கலுக்கு ரிலிஸ் செய்யவேண்டுமென்பதற்காகவே ஈஸ்வரன் எடுக்கப்பட்டுள்ளது எனவே நிச்சயம் இப்படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா குறித்து சர்ச்சை கருத்து.... உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்....