Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“மனிதர்களே இல்லாமல் விலங்குகளை வைத்து ஒரு படம்….” பார்த்திபனின் அடுத்த படம் பற்றிய தகவல்!

“மனிதர்களே இல்லாமல் விலங்குகளை வைத்து ஒரு படம்….” பார்த்திபனின் அடுத்த படம் பற்றிய தகவல்!
, புதன், 20 ஜூலை 2022 (10:04 IST)
வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது.

இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையடுத்து படத்தை ப்ரமோட் செய்யும் விதமாக அனைத்து ஊர்களுக்கும் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இப்போது நடிகர் பார்த்திபனின் அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அவரின் அடுத்த படத்தில் மனிதர்களே இல்லாமல் முழுக்க முழுக்க விலங்குகளை வைத்தே இயக்க உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் சல்மான் கான்? சமூகவலைதளங்களில் பரவும் தகவல்!