Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தேசிய விருதுக்கு தகுதியற்றவளா?... நித்யா மேனன் ஆவேச பதில்!

vinoth
வியாழன், 17 அக்டோபர் 2024 (14:43 IST)
கடந்த ஆகஸ்ட் மாதம் 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

ஆனால் நித்யா மேனனை விட கார்கி படத்தில் நடித்த சாய்பல்லவிக்குதான் தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என சிலர் சமூகவலைதளங்களில் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர்.  ஏனென்றால் திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனனின் நடிப்பு ஒன்றும் சிலாகித்து சொல்லும் அளவுக்கானது இல்லை என்றும் ஆனால் கார்கி படத்தில் சாய்பல்லவி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “தேசிய விருதுக்கு தகுதியான நடிப்பை நான் கொடுத்துள்ளதால்தான் எனக்கு அவ்விருது கொடுக்கப்பட்டுள்ளது. அழுவது மற்றும் சோகமாக இருப்பது மாதிரி யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தில் அமீர்கான் வரும் காட்சிகள் எத்தனை நிமிடம்?... அவரே வெளியிட்ட தகவல்!

ராமாயணம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

சூர்யா 45 படத்தின் டீசர் & டைட்டில் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

என்னிடம் எப்போதும் என் தாத்தாவைப் பற்றி மட்டுமே கேட்பார்கள்.. வேறு கேள்வியே இல்லையா –யதீஷ்வரன் ஆதங்கம்!

யுவனுக்கும் எந்த பிரச்சனையுமில்லை… ரசிகர்கள் என்னைத் திட்ட வேண்டாம் – இயக்குனர் ராம் !

அடுத்த கட்டுரையில்
Show comments