Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் சுதந்திரத்தை புதைக்கமுடியாது; பிக்பாஸ் புகழ் சுஜா வருணி ட்வீட்

மக்கள் சுதந்திரத்தை புதைக்கமுடியாது; பிக்பாஸ் புகழ் சுஜா வருணி ட்வீட்
, திங்கள், 23 அக்டோபர் 2017 (16:31 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் வொயில்ட் கார்டு எண்ட்ரியாக ஹரிஷ், காஜல்  மற்றும் சுஜா வருணி பிக்பாஸ் வீட்டில் நுழைந்தனர். அதில் கலந்து கொண்டு கடினமாக டாஸ்ட் செய்த சுஜா வருணி 'மெர்சல்' படத்தை பார்த்துவிட்டு ட்வீட் செய்துள்ளார்.

 
மெர்சல் படத்தின் சில காட்சிகளை நீக்கவேண்டும் என பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மெர்சல் படத்திற்கு இலவச  விளம்பரம் கிடைத்துள்ளது. 
 
நடிகர் விஜய்க்கும், படக்குழுவுக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. பிக்பாஸ் புகழ் சுஜா வருணி அனைவரும் ஒரு  மருத்துவமனைகளில் நடக்கும் கேவலமான செயல்களால் அனுபவப்பட்டிருப்போம். அந்த வலியை தைரியமாக அட்லீயும்,  நம்முடைய தளபதியும் சொல்லியிருக்கிறார்கள். சுதந்திரத்தைப் புதைக்கமுடியாது. அடக்க நினைத்தால் பெருகிவிடும்' எனக்  கூறியுள்ளார்.  மெர்சல் படத்தை விரும்புகிறேன். ஒரு கலைஞனை, மக்கள் சுதந்திரத்தை புதைக்கமுடியாது. அடக்க  நினைத்தால் மக்கள் அப்போது மில்லியனாக பெருகிவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

webdunia
 
'தமிழனா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்... தமிழ்ப் பெண்ணாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்' என பதிவிட்டுள்ளார் சுஜா  வருணி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெர்சல் எதிரொலி - விஜயை குறி வைக்கும் வருமான வரித்துறை?