Publish Date: Fri, 20 Oct 2017 (14:29 IST)
Updated Date: Fri, 20 Oct 2017 (14:32 IST)
விஜய் டிவி டி.ஆர்.பிக்காக எதையும் செய்யும் என்பது சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனைவருக்கும் புரிந்தது. பிக்பாஸ் முடியும் வரை அரசியல் குறித்து பரபரப்பாக பேசிய கமல்ஹாசன் இப்போழுது பம்முவதில் இருந்தே இது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் டி.ஆர்.பிக்காக 'நீயா நானா' நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய ஒரு தலைப்பை தேர்வு செய்துள்ளது. வரும் ஞாயிறு அன்று நீயாநானா நிகழ்ச்சியில் யார் அழகு? கேரளத்துப் பெண்களா? தமிழ்நாட்டுப் பெண்களா? என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பவுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியின் புரமோ இன்னும் சில மணிநேரங்களில் வெளிவரவுள்ளதாகவும் விஜய்டிவியின் டுவிட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை காட்சிப்பொருளாகவே, அழகுப்பொருளாகவே பார்த்து வந்த மனப்பான்மை மாறி வரும் நிலையில் இதுபோன்ற நிகழ்ச்சி தேவையா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.