Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எது சிம்புவ வச்சு 30 நாள்ல படமா? தலைவன் ஹிஸ்டரி தெரியுமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

எது சிம்புவ வச்சு 30 நாள்ல படமா? தலைவன் ஹிஸ்டரி தெரியுமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!
, திங்கள், 5 அக்டோபர் 2020 (10:57 IST)
நடிகர் சிம்பு மற்றும் சுசீந்தரன் இணையும் படத்தின் படப்பிடிப்பை 30 நாளில் நடத்த முடிவு செய்துள்ளார் சுசீந்தரன்.

நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்குப் பிறகு அவர் மிஷ்கின், சேரன் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். இந்நிலையில் இப்போது இயக்குனர் சுசீந்தரன் சிம்புவிடம் கிராமியக் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே வாங்கியுள்ளாராம்.

மாநாடு படத்துக்குப் பிறகு சிம்பு சுசீந்தரன் இயக்கத்தில்தான் நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போதே சிம்புவின் படத்தின் வேலைகளை சுசீந்தரன் மும்முரமாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் மாநாடு படத்துக்கு முன்னதாகவே இந்த படத்தில் நடிக்க உள்ளாராம் சிம்பு. இந்நிலையில் சுசீந்தரன் குறைந்த பட்ஜெட்டில் 30 நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் நெட்டிசன்களோ ’சிம்புவைப் பற்றி தெரியாமல் சுசீந்தரன் ஆழக்கால் வைக்கிறார். தலைவன் ஹிஸ்டரியை வல்லவன் மற்றும் அன்பானவன் அசராதவன் மற்றும் அடங்காதவன் ஆகிய படங்களின் தயாரிப்பாளர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள்’ எனக் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். சிம்பு ஷூட்டிங்குக்கு ஒழ்ங்காக வரமாட்டார் போன்ற குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்பார்ப்பை எகிற வைத்த ஓ மணப் பெண்ணே… முதலில் நடிக்க இருந்தது விஷ்ணு விஷால்தானாம்!