Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சன் பிக்சர்ஸோடு சம்பள விஷயத்தில் இழுபறி – விஜய் யோசனை!

சன் பிக்சர்ஸோடு சம்பள விஷயத்தில் இழுபறி – விஜய் யோசனை!
, செவ்வாய், 7 ஜூலை 2020 (07:00 IST)
மாஸ்டர் படத்துக்குப் பின் விஜய் நடிக்க இருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது.

தமிழ் சினிமா நடிகர்களில் இப்போது உச்சகட்ட பார்மில் இருக்கிறார் விஜய். அவர் நடித்த மெர்சல், சர்கார் மற்றும் பிகில் ஆகிய படங்கள் இமாலாய வசூல் செய்து சாதனை படைத்தன. அதனால் படத்துக்குப் படம் அவரது சம்பளம் அதிகமாகிக் கொண்டே சென்றது. கடைசியாக அவர் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு 80 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டருக்குப் பின் அவர் நடிக்க இருக்கும் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் நிலையில் முந்தைய படத்தின் சம்பளத்தை விட அதிகமாக வாங்கவேண்டும் என நினைக்கிறாராம் விஜய். ஆனால் தயாரிப்பு நிறுவனமோ கொரோனாவுக்குப் பின் சினிமா வியாபாரம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகத்தில் உள்ளது. அதனால் முடிந்தவரை சம்பளத்தைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. சம்பள விஷயத்தில் இரு தரப்புக்கும் உடன்பாடு எட்டப்படாததால் கொரோனாவுக்குப் பின் முடிவு செய்துகொள்ளலாம் எனக் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிஷ்கின் தயாரிக்கும் பிதா! –இயக்குனர் யார் தெரியுமா?