Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலேசியா: ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதா? - 3 வாரங்களாக கொரோனா உயிரிழப்புகள் ஏதுமில்லை

மலேசியா: ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதா? - 3 வாரங்களாக கொரோனா உயிரிழப்புகள் ஏதுமில்லை
, திங்கள், 6 ஜூலை 2020 (22:30 IST)

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 3 வாரங்களாக அங்கு கொவிட் 19 நோயுடன் தொடர்புள்ள உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.

இத்தகவலை மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8,668 ஆகும். இவர்களில் இதுவரை 8,476 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 121ஆக நீடிக்கிறது.

"தற்போது 71 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இரண்டு நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

"கடந்த 22 நாட்களாக கோவிட்19 நோய்த்தாக்கம் உள்ள எவரும் உயிரிழக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றை மலேசியாவும் வெற்றிகரமாக சமாளித்துள்ளது," என்று நிர்வாகத் தலைநகரான புத்ரா ஜெயாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் அகன்றுவிட்டதாகக் கருதப்பட்ட நாடுகளில் அதன் தாக்கம் மீண்டும் ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய நிலை மலேசியாவில் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமானால், அரசாங்கம் அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியம் என்றார்.

மலேசியாவில் அண்மைய சில தினங்களாக புதிய கொவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 97.8 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.
 

 


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10,000 தேனீக்களை கர்ப்ப வயிற்றில் வைத்து போட்டோஷூட் நடத்திய கர்ப்பிணி: அதிர்ச்சி புகைப்படங்கள்