Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை நயன்தாராவின் `X' தள பக்கம் ஹேக் செய்யப்பட்டதா? என்ன நடந்தது?

நடிகை நயன்தாராவின் `X' தள பக்கம் ஹேக் செய்யப்பட்டதா? என்ன நடந்தது?

Mahendran

, வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (16:32 IST)
நடிகை நயன்தாராவின் எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அவரே ட்விட் செய்ய செய்துள்ளதாக அவரே பதிவு செய்துள்ளார்.
 
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த பல வருடங்களாக எந்த சமூக வலைதளங்களிலும் இல்லாமல் இருந்த நிலையில் ஜவான் படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த போதுதான் சமூக வலைத்தளத்தில் இணைந்தார். 
 
ஜவான் படத்தின் ப்ரமோஷனுக்கு வர முடியாது என்று கூறிய போது சமூக வலைதள பக்கம் தொடங்கி அதிலாவது ப்ரமோஷன் செய்யுங்கள் என்று ஷாருக்கான் கேட்டுக் கொண்டதாகவும் அதனை அடுத்து அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளத்தில் கணக்கை தொடங்கியதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கங்களில் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வந்த நிலையில் திடீரென சற்றுமுன் நகர் தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே அதில் தேவையில்லாத கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்திருந்தால் அதை பெரிது படுத்த வேண்டாம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார் 
 
நயன்தாரா சொன்னது போலவே அவரது பக்கத்தில் சில தேவையில்லாத விளம்பரங்கள் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காரா - கப்பலா? இவ்ளோ கோடியா?. புதிய கார் வாங்கிய அஜித்..!!