Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு லட்சம் பேருக்கு விருந்து… நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஏற்பாடு

ஒரு லட்சம் பேருக்கு விருந்து… நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஏற்பாடு
, வியாழன், 9 ஜூன் 2022 (10:47 IST)
இன்று திருமணம் நடக்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் இன்று நடைபெற உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெறும் இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு செல்போன் அனுமதி கிடையாது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று அவர்கள் திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”காதல் கதையா… அது கஷ்டம்” … வைரலாகும் இயக்குனர் லோகேஷின் பதில்!