Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்துக்கு நன்றி சொன்ன நயன்தாரா; எதற்கு தெரியுமா?

அஜித்துக்கு நன்றி சொன்ன நயன்தாரா; எதற்கு தெரியுமா?
, வியாழன், 10 மே 2018 (19:44 IST)
விஸ்வாசம் படம் மூலம் அஜித்துடன் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 
நயன்தாரா கதாபத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கி விட்டார். அதுவும் குறிப்பாக ஹீரோ இல்லாத கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். டோரா படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அறம் திரைப்படம் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது. 
 
ஹீரோவுக்கு நிகராக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் சிவா - அஜித் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. இந்த விஸ்சாவம் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்துள்ளார்.
 
இதில் தனக்கு இணையாக நயன்தாராவுக்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அஜித் இயக்குநர் சிவாவிடம் கேட்டுக்கொண்டாராம். இதற்காக நயன்தாரா அஜித்திடம் நன்றி தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.   

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘விஸ்வாசம்’ படத்தில் ‘மெர்சல்’ பாட்டி