Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவின் திரைப்படமும் ஓடிடிக்கு செல்கிறது! விக்னேஷ் சிவன் முடிவு!

Advertiesment
நயன்தாராவின் திரைப்படமும் ஓடிடிக்கு செல்கிறது! விக்னேஷ் சிவன் முடிவு!
, திங்கள், 26 ஏப்ரல் 2021 (09:14 IST)
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக ஓடிடிக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படங்களில் நெற்றிக்கண்ணும் ஒன்று. இந்த படத்தை அவரது வருங்கால கணவரான விக்னேஷ் சிவனின்  ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி  முடிந்து விட்டது. ரிலிஸுக்கு தயாரான நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் மிக அதிகமாக இருப்பதால் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த படத்தை ஓடிடிக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது நெற்றிக்கண் படக்குழு. இது சம்மந்தமாக படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவேக்குக்கு மரியாதை செலுத்த இரண்டு திட்டங்கள்… மத்திய அரசு ஆலோசனை!