Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புனேவுக்குப் பறந்த நயன்தாரா மற்றும் பிரியாமணி!

புனேவுக்குப் பறந்த நயன்தாரா மற்றும் பிரியாமணி!
, வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:59 IST)
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூனேயில் தொடங்க உள்ளது.

ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி இணைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் இப்போது மும்பையில் முதல் கட்டப் படப்பிடிப்பை மாற்றியுள்ளனர் படக்குழுவினர். இந்த படப்பிடிப்பை முடித்து விட்டு ஷாருக் கான் நடிக்கும் வேறு படங்களின் படப்பிடிப்பும் முடிந்த பின்னரே துபாய்க்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்ள நயன்தாரா மற்றும் பிரியாமணி ஆகியோர் பூனேவுக்கு சென்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீயா நானா… இந்த வாரம் வடிவேலு ஸ்பெஷல்!