Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிநாடு சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன்

வெளிநாடு சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன்
, வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (21:33 IST)
நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வெளி நாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன் தாரா. இவர், சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன் தாரா தற்போது, இந்தியில் ஷாருக்கானுன் ஜவான்,ம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் காட்பாதர் உள்ளிட்ட பல படங்களில்  நடித்து வருகிறார்.

ஷங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணன் இயக்கவுள்ள   படத்தில் நயன் தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த விக்னேஷ் சிவனை எல்லோரும் பாராட்டினர்.

இந்த  நிலையில், நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஓய்வுக்கான ஸ்பெயின் சென்றுள்ளனர்.

அங்கு 10  நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

 சென்னை திரும்பிய பின் விக்னேஷ் சிவன் அஜித் 62 பட வேலைகளில் இறங்கவுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் படத்தை முதல் நாளே பார்த்த நடிகர் விஜய்...லோகேஷிடம் என்ன சொன்னார் தெரியுமா?